மக்கள் நலச் சந்தை
மக்கள் நலச் சந்தை எப்படி செயல்படுகிறது?
“நம் மக்களுக்கு நச்சில்லா உணவு கொடுப்போம்”
இது விற்கும் இடமல்ல……. கற்கும் களம்
♦ இயற்கை விவசாயிகளும் நுகர்வோர்களும் நேரடியாகச் சந்தித்து விற்பனை செய்து கொள்ளும் இடம் மக்கள் நலச் சந்தை
(Makkal Nala Santhai- people welfare Market)
♦ கவுரமான விற்பனையில் நியாயமான விலையில் விவசாயிகளுக்கும், நம்பகமானபொருட்களை நிலத்திலிருந்து நேரடியாக
நுகர்வோர்களுக்கும் கிடைக்க வழிவகைச் செய்துள்ள தனித்துவமான சந்தை
♦ இயற்கை விவசாய காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் .
நாட்டுப்பால், நாட்டுக் கோழி & முட்டை, தேன், வேர்கடலை, சிறு தானியங்கள், மஞ்சள், நெல்லி, பாரம்பரிய அரிசி வகைகள் பாக்கு
மட்டை தட்டுகள், துணிப்பைகள் போன்ற சூழல் காக்கும் பொருட்கள் என பலவும் விற்பனைக்குக் கிடைக்கும்
♦ இயற்கை விவசாயப் பொருட்கள் மதிப்புக் கூட்டுதல் செய்துவரும் தொழில்முனைவோர்களும் தங்கள் பொருட்களை
அவர்களே விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்
♦ ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருமகள் திருமண
மண்டபம், காந்தி நகர், வேலூரில் நடைபெறுகிறது
♦ நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது
♦ மக்கள் நலச் சந்தையினைத் துவக்கி வைத்தவர் மரியாதைக்குரிய விஐடி பல்கலைகழகத்தின் துணைத் தலைவர்
முனைவர் ஜி.வி.செல்வம் அவர்கள்
♦ தொடர்ந்து இதுவரை 25 மாதங்கள் நடைபெற்றுள்ளது
♦தற்போது வாரச் சந்தையும் துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் காலை 6.00 மணி
முதல் காலை 10.00 மணி வரை அசோக் பிளான்ட் நர்சரி நான்காவது கிழக்கு பிரதான சாலையில் நடைபெற்று வருகிறது.
இதுவரை 77 வாரங்கள் நடைபெற்றுள்ளன.
♦ மக்கள் நலச் சந்தையில் இணைப்பில் உள்ள தொழில் முனைவோர்களாக உள்ள பெண்களை ஒருங்கிணைத்து
மகளிர் தொழில் முனைவோர் இணையம் ( WAN- Women Agripreneur Network ) உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு
தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பிற நிறுவனங்களில் இவர்களுக்கு சந்தை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்படுகிறது. இவர்களின் ஒருங்கிணைப்பில்
ஆக்சிலியம் கல்லூரியில் ஆர்கானிக் அப்( Auxilium Organic Hub) கல்லூரி மாணவிகளுக்கு நச்சில்லா நொறுக்குத்
தீனிகள் வழங்கி வருகிறது. மேலும் பல கல்வி நிறுவனங்களில் இத்தகைய ஸ்டால்கள் அமைக்க உள்ளனர்.
♦ மக்கள் நலச் சந்தை ஒருங்கிணைப்புக் குழு :
சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இயற்கை ஆரவலர்கள்
மற்றும் இயற்கை விவசாயிகளைக் உள்ளடக்கிய குழு இந்த சந்தையினை வழி நடத்துகிறது. இலாப நோக்கின்றி
இந்த சந்தை நடை பெறுகிறது.
♦ மக்கள் நலச் சந்தையின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுபவர் திரு. கு.செந்தமிழ் செல்வன்.
ஏற்கனவே, நான்கு ஆண்டு காலமாக செயல்படும் “நம் சந்தை”யினை துவக்கி நடத்தியதில் பெருங்காற்றியவர்
♦இயற்கை விவசாயிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருபவர். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். அறிவுத்தோட்டம்
எனும் இயற்கை விவசாயப் பண்ணையினை கடந்த 12 ஆண்டுகளாக பராமரித்து வருபவர்
♦ விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணம் வசூலிப்பதில்லை
அவர்கள் விற்பனைச் செய்த முழுத்தொகையுடன் வீடு செல்கின்றனர்
இயற்கை விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் கவனத்திற்கு:
♦ இயற்கை விவசாயிகள் விற்பனை செய்ய பதிவு செய்து கொள்ளப்படுவார்கள்
♦ இயற்கை விவசாயி என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. மக்கள் நலச் சந்தை குழுவினர்
நிலத்தினைப் பார்வையிட்டு உறுதி செய்வார்கள்
♦ பிளாஸ்டிக் பொருட்கள் அனுமதியில்லை
♦ மக்கள் நலச் சந்தை ஒருங்கிணைப்புக் குழு பொதுவாக விலை நிர்ணயம் செய்யும். உழவர் சந்தை
விலையுடன் 20% கூடுதலாக விற்கப்படும்
♦ தங்களது நிலத்தின் உற்பத்தியினை மட்டும் கொண்டு வரவேண்டும். பிறருடைய பொருட்களை வாங்கி வந்து
விற்பனை செய்யக் கூடாது
♦ நிலத்திலிருந்து நேரடியாக விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருக்கக் கூடாது
♦ தொழில்முனைவோர் இயற்கை விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டிக் கொண்டு வரலாம்
♦ தங்களது உற்பத்திகளை மட்டுமே விற்கலாம். பிராண்டு இருப்பின், அந்த பிராண்டு தவிர பிற தயாரிப்புகளை
கொண்டு வரவோ, விற்கவோ கூடாது.
♦ சந்தையில் நுகர்வோர்களுக்கு மட்டுமே விற்கலாம்
♦ சக ஸ்டாலர்களுடன் இணக்கமான போக்கு வேண்டும்
♦ புதிய இயற்கை விவசாயிகளை புதிய தொழ்ல்முனைவோர்களை தொடர்பு படுத்த வேண்டும்
நுகர்வோர்களின் கவனத்திற்கு:
♦ தரமான, புதிதான காய்கறிகள், பழங்கள், கீரைகள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கும். இயற்கை
விவசாயப்பொருள் என்பதை நம்பிக்கையுடன் வாங்கிச் செல்லாம்
♦ நச்சில்லா உணவினை உங்கள் குடும்பத்தாருக்கு கிடைக்க இது சிறந்த ஏற்பாடு
♦ இயற்கை விவசாயிகள் நிலங்களை நேரடியாகப் பார்வையிடவும் ஏற்பாடு செய்கிறோம்
♦ விவசாயிகளுடன் பேரம் வேண்டாம்
இயற்கை விவசாயப் பொருட்களுக்கான பிரச்சாரம்:
இயற்கை நேசிப்பே இயற்கை விவசாயம் என்ற கோட்பாட்டில் மக்களை அணிதிரட்டும் பணி சேர்ந்தே நடைபெறுகிறது
♦ பல ஆண்டு காலமாக மூளை சலவைச் செய்யப்பட்டு இரசாயன உரங்கள் / பூச்சிக் கொல்லிகள், மரபணு
மாற்றப்பட்டவைகளுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளோம். இதன் விளைவுகளையும் மாற்றுகளை முன் வைப்பதும்
மக்கள் நலச் சந்தையின் அடிப்படை வேலையாகச் செய்கிறோம்
♦ வாட்ஸ் ஆப் குழுக்கள், முக நூல்கள் வழி சந்தைத் தகவலுடன் விழிப்புணர்வுக் கருத்துக்களும் கொண்டு
செல்லப்படுகின்றன். மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது
அடுத்த நகர்வுகள்:
♦ இயற்கை விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்க கிராமம் தோறும் ”
மண் நல மையம்” துவக்கப்பட்டு வருகிறது.தற்போது கீழ் வெங்கடாபுரம், குடிமல்லூர், மோத்தக்கள், காளாம்பட்ட்டு
ஆகிய கிராமங்களில் செயல்படுகிறது
♦ வேலூர் காந்தி நகர் பகுதி மட்டுமல்லாது வேலூரைச் சுற்றி பல மையங்களில் சந்தைகள் துவக்க
திட்டமிடப்படுகிறது
மக்கள் நலச் சந்தை அனுபவங்கள்:
தரமான நச்சில்லா இயற்கை விவசாயப் பொருட்களுக்கு மக்களிடம் ஆதரவுப் பெருகி வருகின்றன.
அவர்களுக்கு தெளிவு படுத்தும் பணியில் பொறுமையுடன் ஈடுபட வேண்டியுள்ளது.
சந்தை ஒரு தொடர்பு மையமாக விவசாயிகள்- தொழில்முனைவோர்கள்- நுகர்வோர்கள் நெருக்கமாக செயல்பட வழிவகுக்கிறது.
விவசாயத்தைப்பற்றிய மதிப்பு மக்கள் மத்தியில் உயர்ந்து வருகிறது. காய்கறிகளுக்கான விலையினை
விவசாயி நிர்ணயிக்க வேண்டியதின் அவசியத்தை உணைர்ந்து வருகின்றனர்.
பல பகுதிகளில் நேரடி விற்பனை மையங்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மக்கள் நலச் சந்தையின் அனுபவங்கள் அடிப்படியில் மாநில அரசும் வேளாண் வணிகத்துறையின் வழியாக
விற்பனை மையங்களைத் துவக்க கோரிவருகிறோம்.
இயற்கை ஆர்வலர்கள்,இயற்கை விவசாயிகள் தங்களது பகுதியில் மக்கள் நலச் சந்தையினை முன் மாதிரியாகக்
கொண்டு துவக்குவதற்கும் வழிகாட்டத் தயாராக உள்ளோம்.
”மக்கள் நலச் சந்தை செய்திகள் ” வாட்ஸ் ஆப் குழுக்கள் மூன்று இயங்கி வருகிறது. தொடர்ந்து இயற்கை விவசாய
பொருட்களின் சந்தை குறித்து அறிய கீழ்கண்ட இணைப்பின் வழி இணையலாம்.
https://chat.whatsapp.com/JkwUXVJcvIfBvv3ig7C7CW அல்லது கீழ்கண்ட என்னுடைய எண்ணிற்கு வாட்ஸ் ஆப்
வழி செய்தி அனுப்பினாலும் இணைக்க இயலும். தங்களோடு தொடர்புடையவர்களையும் இணையுங்கள்.
மேலும் விவரங்களுக்கு:
திரு. கு.செந்தமிழ் செல்வன்( ஒருங்கிணைப்பாளர்), 94430 32436.
Makkal nala santhai news link : https://chat.whatsapp.com/JkwUXVJcvIfBvv3ig7C7CW